கோவை, டிச 7- கோவையில் இருந்து சென்னைக்கு 2-வது கட்ட மாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு உள் ளிட்ட 4 மாவட்டங்களில் மழைநீர் வெள்ளம் சூழந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றி லுமாக பாதிப்படைந்துள்ளது. இதனைய டுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், அத்தியாவசிய பொருட்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வு அமைப்பினர் சேகரித்து அனுப்பி வருகின்ற னர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பாக வியாழனன்று 2டன் பொருட்கள் இரண்டா வது கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணி களை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்கு மார் ஆய்வு மேற்கொண்டார். காவல்துறை இதேபோன்று, கோவை மாநகர காவல் துறை சார்பிலும் சுமார் ரூ.5.74 லட்சம் மதிப்பி லான நிவாரண பொருட்கள சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிவாரண பொருட் களை கோவை மாநகர காவல் ஆணையா ளர் பாலகிருஷ்ணன் அனுப்பி வைத்தார்.