தருமபுரி, ஏப்.20- தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி யில், கழிவுநீர் கால்வாய் இல்லாததால் மழைநீர் சாலையில் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி யுள்ளனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த இரண்டு தினங் களாக பரவலாக மழை பெய்து வரு கிறது. இந்நிலையில், திங்களன்று சூறா வளி காற்றுடன் ஒருமணி நேரத்திற்கு மேலாக பலத்தமழை செய்தது. இத னால் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தும் பகுதி கள் முழுவதும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், மழைநீரானது குளம்போல் தேங்கி நின்றது. இதனால், பேருந்துக்காக நிற்கும் பய ணிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி யுள்ளனர். கழிவுநீர் கால்வாயை முறை யாக பராமரிப்பு செய்யாததினால் சேலம் தருமபுரி சாலையில் உள்ள சாலையோர கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால், கடை வியாபாரிகள் பாதிப்படைந்தனர். மேலும், சாலையின் தாழ்வானபகுதிகளில் மழை நீர் கழிவுநீருடன் சேர்ந்து வெளியேற முடியா மல் தேங்கி நின்று அவ்வப்போது துர்நாற்றம் வீசுகிறது. நல்லம்பள்ளியில் உள்ள இருபுற சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.