districts

img

தாராபுரத்தில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வணிகக் குழு சின்னங்கள் பொறித்த கல் கண்டுபிடிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்டைமேட்டுப் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அத்தி கோசத்தார் வணிகக் குழுவின் சின்னங் கள் பொறித்த கல் ஒன்றை தொல்லியல் ஆய்வு மையத்தினர் கண்டறிந்துள்ள னர். திருப்பூரில் இயங்கி வரும் வீரரா சேந்திரன் தொல்லியல் மற்றும் வர லாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், இரா.கும ரவேல், க.பொன்னுச்சாமி மற்றும் ந. சுதாகர் ஆகியோர் கொண்ட குழுவி னர் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது இந்த கொங்கு மண்டலத்தின் பல் வேறு பகுதிகளிலும் தொல்லியல் வர லாற்றுச் சான்றுகள் குறித்து, தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்ற னர். அதன் ஒரு பகுதியாக அண்மை யில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  வணிகக் குழுவின் சின்னங்கள் பொறித்த கல்லை கண்டறிந்துள்ள னர். இது தொடர்பாக இந்த ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு. ரவிக்குமார் தெரிவித்ததாவது: தாராபு ரம் நகரம் பண்டை கால வணிகப் பெருமை மிக்க நகரமாகும். தற்போது எங்கள் அமைப்பின் சார்பில் கண்டறி யப்பட்டுள்ள வணிக சின்னங்கள் அடங்கிய கல் தாராபுரத்தின் சிறப்பை தற்போதைய சூழலில் வெளி உல குக்கு பறைசாற்றக் கூடியதாக இருக்கி றது. இதன் மூலம் இந்நகரின் வணிகப் பெருமையை நன்கு அறிய முடிகின் றது.

இக்காலத்தில் தேசிய நெடுஞ் சாலைகள் சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிப்பது போல, அக் காலத்தில் பெரு வழிகள் என்றழைக் கப்பட்ட பாதைகள் வணிக போக்குவ ரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். தாராபுரம் நகரம் அத்தகைய வணிக பெரு வழியாகத் திகழ்ந்துள் ளது.  பண்டைய இந்தியாவில் பல்வேறு பட்ட தொழிற் குழுக்கள் செயலாற்றிச் சிறப்படைந்தன. தென்னிந்தியாவில் தோன்றி நிலைபெற்ற குழுக்கள் பல  நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள  கொடுமணல் தமிழ் பிராமிப் பானை ஓடு  “நிகம்” என்ற வணிகக் குழுவைச் சுட்டு கிறது. தமிழகத்தின் தொழிற் குழுக்க ளில் இதுவே காலத்தால் முற்பட்டது. இதற்கு அடுத்து சங்க இலக்கியங்கள் பல வணிகச் சாத்துகள் பற்றிப் பேசு கின்றன. இடைக்காலத்தில் சித்திர மேழி, நானாதேசி, மணிக்கிராமம், வளஞ்சியர், அஞ்சு வண்ணம் போன்ற குழுக்கள் குறிப்பிடத்தக்கவை. வணி கர்கள் தங்கள் பாதுகாப்புக்கு வைத்தி ருந்த படைகள் கூடத் தங்களுக்கென குழுக்கள் வைத்திருந்தனர். இவ்வாறு நிலைபெற்ற பல்வேறு குழுக்களில் “அத்திகோசமும்” ஒன்று. இந்தக் குழு வைப் பற்றித் தமிழகக் கல்வெட்டுக் களும், இலக்கியங்களும் விரிவாகப் பேசுகின்றன.  அத்திகோசத்தார் பற்றிய கல்வெட் டுகள் பெரு வழி ஓரத்திலேயே கிடைக் கின்றன.

பெரு வழிகளில் வணிகப் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப் பட்ட யானை காலாட் படைகளின் தலை வர்களின் குழுக்களே “அத்திகோசம், வீரகோசம்” என்பனவாகும். பெரு வழி களில் படைவீரர்கள் தங்கியிருந்து வணிகர்களிடம் சுங்கம் வாங்கவும், வணிகர்களைக் கள்வர்களிடம் இருந்து காக்கவும் இவை செயல்பட் டுள்ளன. மேலும் பெருவழி ஓரத்தில் உள்ள ஊர்களில் செய்யப்பட்ட தானத் தைச் செயல்படுத்தவும், பாதுகாக்க வும் இவர்கள் வேண்டப்பட்டார்கள்.  தாராபுரத்திலும் பண்டைய பெரு வழி ஓரத்தில் உள்ள கோட்டை மேட்டில் 115 செ.மீ உயரமும், 75 செ.மீ. அகல மும் கொண்ட ‘அத்திகோசத்தார்’  சின் னங்கள் பொறிக்கப்பட்ட கல் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மேல் வரிசையில் யானை, குதிரை, பசும்பைக்கட்டு (பணப்பை), கீழ் வரி சையில் சிறிய உளி, அளவுகோல், அங் குசம் கோடரி,  இருவகை அரிவாள் கள், சாட்டைக்கயிறு, மரச்சுத்தியல் பெரிய உளி மற்றும் மழு என மொத்தம் 13 சின்னங்கள் உள்ளன. யானை மற் றும் குதிரைச் சின்னங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால் இவை இடைக் காலத் தில் புகழ்பெற்று விளங்கிய “அத்தி கோசம் வீரகோசம்” குழுவைச் சேர்ந் தவை என அறிய முடிகிறது. எழுத்துப் பொறிப்பில்லாத இந்தச் சின்னங்கள் கிபி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந் தவை என்றும் பொறியாளர் ரவிக் குமார் தெரிவித்தார்.  மேலும் தாராபுரம் நகரம் பண்டைய கொங்கு மண்டல வரலாற்றில் கொங்கு வஞ்சியான “விலாடபுரம்” எனவும் “பராந்தகபுரம்” எனவும் “இராசராசபுரம்” எனவும் அழைக்கப் பட்டுள்ளது. இடைக்காலத்தில் இங்கு  ஆட்சி செய்த “கொங்குச் சோழர்க ளின்” தலைநகரமாகவும் இது விளங்கி யுள்ளது. கொங்கு மண்டலத்தில் அம ராவதி ஆற்றின் மேற்குக் கரையில்  அமைந்துள்ள இவ்வூர், பண்டைய  வஞ்சிப் பெருவழியில் அமைந்திருந்த தால் வணிகத்திலும் சிறப்புற்று விளங் கியது. தற்போது கண்டறியப்பட்டுள்ள அத்திகோசத்தார் சின்னங்கள் பொறிக் கப்பட்டக் கல் இதை மெய்ப்பிப்பதாக உள்ளது என்றும் சு.ரவிக்குமார் கூறி னார்.