districts

img

நிறுத்திவைக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை உடனே வழங்கு

கோவை, அக். 11 -  விதவைகள், விவகாரத்து பெற்றவர்கள், மாற்றுத்திறனாளி குடும்பத்தார் ஆகியோருக்கு நிறுத்திவைக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் சார்பில் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்துறை பொதுத்துறை யாகவே தொடர வேண்டும். வாரிய  உத்திரவு எண்.2 தேதி  2022 ஏப்ரல்  12 முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 2022 ஜனவரி 1ஆம் தேதி  முதல் அகவிலைப்படி 3 சதவிகிதம்  வழங்கப்பட வேண்டும். விதவை,  விவாகரத்தான மகள், மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியம் வழங்கு வதில் தேவையற்ற நிபந்தனை களை நீக்கவேண்டும். ஒப்பந்த பணிக்காலத்தில் 50 சதம் கணக்கில்  எடுத்து ஓய்வுதியம் திருத்தம் செய்து வழங்க வேண்டும். மின்சார மசோதா 2022 நடை முறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி முழுமையான காசில்லா மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர் களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் முழுவதும் தமிழ் நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் போராட்ட இயக்கத்திற்கு அறைகூவல் விடுத் திருந்தது. 

இதன்ஒருபகுதியாக, கோவை  பவர் ஹவுஸ் முன்பு மின்வாரிய  ஓய்வூதியர்கள் மேலாடை அணி யாமல் அரைநிர்வாண போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத் திற்கு ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் சி.வீ.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். இதில், மாநில துணை  தலைவர் என்.சின்னசாமி, மண்டல  செயலாளர் வி.மைக்கேல், மாவட்ட  செயலாளர் கே.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். முன்ன தாக, சகோதர சங்கங்களின் நிர்வா கிகள் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர். முடிவில் பொரு ளாளர் எம்.ஞானப்பிரகாசம் நன்றி கூறினர்.

தருமபுரி

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின்‌சார்பில் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி தலைமை தாங்கினார்.  இதில், மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜயன், மாவட்ட பொரு ளாளர் சின்னசாமி, துணைத் தலைவர்கள் டி.சிவம், ஆர்.ரகுபதி, ஜி.வெங்கட்டேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அரசு போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பின்  மாநில துணைத்தலைவர் கே.குப்பு சாமி வாழ்த்தி உரையாற்றினார்.மாவட்ட துணைத்தலைவர் எம்.துரைசாமி நன்றி கூறினார். ஈரோடு  ஈரோடு மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே. குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில உதவி செய லாளர் சி.ஜோதிமணி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிர மணியன் ஓய்வு பெற்றோர் நல  அமைப்பின் தலைவர் இ.குழந்த சாமி உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில், ஜி.மூர்த்தி நன்றி கூறினார்.

சேலம்

சேலம், மேட்டூர் அனல் மின்  நிலையம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உதவி தலைவர் ஜி. பி.நந்த கோபால் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேட்டூர் மின் திட்ட தலைவர் ஆர்.சுந்தர்ராஜன் துவக்கி வைத்தார். துணை பொருளாளர் எ. பழனிசாமி வரவேற்புரையாற்றினார். செய லாளர் பி.சி.கேசவ பெருமாள் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் வி. இளங்கோ, சிஐடியு மாவட்ட  துணை செயலாளர் சி.கருப் பண்ணன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முடிவில், பொரு ளாளர் பி.பி.பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.