புதுதில்லி, பிப். 19 - கடந்த 2024-ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ. 1,554.99 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக ஒன்றிய பாஜக அரசு ஒதுக்கியிருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புதனன்று உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவிலேயே, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, ஒடிசா, தெலுங்கானா, நாகா லாந்து, திரிபுரா ஆகிய மாநிலங் களுக்கு கூடுதலாக ரூ. 1,554.99 கோடி பேரிடர் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, ஆந்திராவுக்கு ரூ. 608.08 கோடி, நாகாலாந்துக்கு ரூ. 170.99 கோடி, ஒடிசாவுக்கு ரூ. 225.24 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ.231.75 கோடி, திரிபுராவுக்கு ரூ. 288.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை ஏற்படுத்திய பெஞ்சால் புயலுக்கு ஒரு பைசாவைக் கூட தமிழகத்துக்கு மோடி அரசு ஒதுக்கவில்லை. வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு உள்ளான கேரளத்துக்கும் கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. தமிழக மழை - வெள்ளப் பாதிப்பு ரூ. 37 ஆயிரம் கோடி கோரப்பட்டது டன், கடந்தாண்டு பெஞ்சால் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 6,675 கோடி வழங்கிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், நிதி ஒதுக்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு மீண்டும் தமிழகத்தைப் பழிவாங்கி யுள்ளது. ஆனால், இதற்கு முன்பு ரூ. 18 ஆயிரத்து 322 கோடியே 80 லட்சத்தை மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 27 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய நிலையில், அப்போது, தமிழக - கேரள மாநிலங்களை ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்தது.