மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி இந்திய அணிக்கு திருப்பூர் வீரர் தேர்வு
திருப்பூர், மே 25- நேபாளத்தில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளி களுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் தேர்வு செய்யப் பட்டுள்ளார். நேபாளம் நாட்டில் ஜூன் 10, 11, 12 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடை பெற உள்ளது. இத்தொடரில் விளையாட தமிழக மாற் றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், மங் கலம், அக்ஹாரப்புத்துாரைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன், அரிய லுார் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகி யோர் ஆவர். இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த ஷாகுல்ஹமீது கூறுகையில், மங்கலம் அரசு பள்ளி யில் 10 ஆம்வகுப்பு வரை படித்தேன். வலது கை பாதித் திருந்தாலும், தன்னம்பிக்கையுடன் விளையாடி வருகி றேன். தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி யில் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகி றேன். கிராமத்தில் இருந்து பயிற்சி பெற்ற நான் முதன் முறையாக வெளிநாட்டுக்கு சென்று விளையாட இருக் கிறேன். நேபாள கிரிக்கெட் தொடரில், முழு திறமையை யும் வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க் கும் வகையில், சாதனை படைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை காவல் துறைக்கு ஆம் ஆத்மி கோரிக்கை
திருப்பூர், மே 25- திருப்பூர் நகரில் குற்றங்களை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.சுந்தரபாண்டியன் கோரியுள் ளார். இதுதொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணை யர் ஏ.ஜி.பாபுவுக்கு அவர் செவ்வாயன்று அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகர பகுதிகளில் குடியிருக்கும் நபர்களின் அடை யாள அட்டை, ஆவணங்களை வாங்கிக்கொண்டு தான் வீடு வாடகைக்கு விட வேண்டும் என வீட்டு உரிமை யாளர்களுக்கு காவல்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் அதை அருகில் உள்ள காவல்நிலை யங்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுபோன்று செய்தால் மட்டுமே குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். பொது மக்களின் பயத்தை போக்கும் வகையில் காவல்துறை திருப்பூரில் தீவிர ரோந்து பணிகளை முடுக்கி விட்டு தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.சுந்தரபாண்டியன் கேட்டுக் கொண்டுள் ளார்.
சாலையில் ஆடுகள் சுற்றினால் உரிமையாளர் மீது நடவடிக்கை
திருப்பூர், மே 25- சாலையில் ஆடுகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கேயம் நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கேயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகள் பொது இடங்களிலும், சாலைகளிலும் சுற்றித்திரிவ தால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல், சாலைகளில் ஆடுகளை அவிழ்த்துவி டக்கூடாது என நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை ஆடு வளர்ப்போரிடம் நேரில் எச்சரிக்கை விடுக்கப்பட் டது. இந்நிலையில், சொந்தமாக ஆடுகளை வளர்ப் போர் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். அதை யும் மீறி சாலைகள் மற்றும் பொது இடங்களில் ஆடு களை அவிழ்த்து விடும் ஆட்டின் உரிமையாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின்படி காவல்துறை மூலமாக வும், நீதிமன்றத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வண்டல் மண் எடுக்க அனுமதி
திருப்பூர், மே 25- திருப்பூர் மாவட்டத்தில் 32 நீர் நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி மண் எடுத்துக் கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடன டியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப் பித்து, விவசாயத்திற்கு மட்டும் மண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறி யுள்ளார்.