நாமக்கல், ஏப்.27- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரம், சூரியம் பாளையத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் வியாழன்று நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில், சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முரு கேசன், தாலுகா தலைவர் ஆர்.துரைசாமி, தாலுகா செயலா ளர் ஆர்.சக்திவேல் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில், திரளான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர் கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. கிளையின் தலைவராக ரவிச்சந்தி ரன், கிளைச் செயலாளராக குமார், கிளை பொருளாளராக மேகலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.