சேலம், நவ.19- வேளாண் கல்லூரி மாணவர்களை கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே திட்ட பணிகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்களை வகுக் கும் வகையிலும் நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருமானம், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தொகுத்து டிஜிட்டல் முறையாக மாற்றும் பணிகளை தேசிய வேளாண் அமைச்சகம் மேற்கொள்கிறது, இதற்கென 20 ஆயிரம் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க பல்கலை., நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டப் பணி களை மேற்கொள்வதற்காக மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள், கல்வி சுற்றுலா தேதியும் மாற்றப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் கல்வி கற்கும் சூழலை பாதிக்கும் வகை யில் உள்ளதால், இத்தகைய பணிகளில் இருந்து மாணவ, மாணவியரை விடுவிக்க வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத் தினர் சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன், துணைத் தலைவர் கோகுல், துணைச்செயலாளர்கள் அபிராமி, டார் வின், தருமபுரி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.