districts

img

வைர விழா காணும் தீக்கதிர் - சிபிசி வாழ்த்து

கோவை, செப். 28 - வைரவிழா காணும் தீக்கதிர் நாளிதழுக்கு கோயம் புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.  முன்னதாக வைரவிழா மேடையில் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் கார்த்தீஸ்வரன், செயலாளர் மோகன்  ஆகியோர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,  தமிழ்நாட்டில் உள்ள அச்சு ஊடகங்களில் ஜனநாய கத்தின் குரலாக ஒலிக்கும் அச்சு ஊடகங்களில் ஒன்று “தீக்கதிர்” நாளிதழ். 1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த  ஏடு ஊடக உலகில் அறுபது ஆண்டுகளை கடந்து இன்று வைர  விழா காண்கிறது.  தொழிலாளர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் தீக்கதிர் நாளிதழ், மக்களின் ஜனநாயக உரிமை,  அரசியல் சட்டம் வழங்கியுள்ள குடியுரிமை, மனித உரிமை,  மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை, கருத் துரிமை உள்ளிட்டவற்றை காக்கும் அரணாக திகழ்கிறது. 60  ஆண்டுகளுக்கு முன்பாக கோவையில் துவங்கப்பட்ட தீக்கதிர் நாளிதழ் இன்று இதே கோவையில் வைர விழா காண் கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் என்ற கூற்றுக்கு சான்றாக தொடர்ந்து இயங்கி வருகின்றது தீக்கதிர்  நாளிதழ். முப்பெரும் விழாவை முன்னெடுக்கும் தீக்கதிர்  நாளிதழ் குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும் கோயம் புத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த  வாழ்த்துகளும், பாராட்டுகளும் தீ கதிர் வீசட்டும்  என தெரிவிக் கப்பட்டுள்ளது.