districts

img

டயாலிசிஸ் சிகிச்சையும் அரசு மருத்துவமனையின் புதுமையும் - மரு. எஸ்.பெருமாள்பிள்ளை

பதில்: ஆம். இதுகுறித்து பேசிய கேஎம்சி முதல்வர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 12 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. நாள்தோறும் 30 முதல் 45 டயாலிசிஸ் சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. பொதுவாக டயாலிசிஸ் சிகிச்சை யளிக்கும் போது அதற்காக ஊசிகள், மருத்துவக் குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அதனை மாற்றி விட்டு புதி தாக உபகரணங்களை பயன்படுத்து வது என்பது பொருளாதார ரீதியாக இயலாத காரியம். இதனால் அவை உரிய முறையில்  கிருமி நாசினிகளால் தூய்மைப்படுத்தப்பட்டு மறுசுழற்சி பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன வெனில், கிருமிநாசினியால் அவற்றை தூய்மைப்படுத்தும் போது அதற்கு உபயோகப்படுத்தப்படும் ரசாயனங்களால் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்படலாம்.

இதையடுத்து மறுசுழற்சியின்றி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய உபகரணங்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து உபயோகிக்க முடிவு செய்தோம். அந்த முயற்சியே இத்திட்டம் என தெரிவித்தார். முன்னதாக, இந்த புதிய நடை முறையைத் தொடங்கி வைத்த தமி ழக  சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களி டம் பேசிய போது, கொரோனா காலத் தில் நாம் தொற்றா நோய்களிலும் கவ னம் செலுத்தி முன்னெச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் 37.83 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத் தம், 15 லட்சம் பேருக்கு சர்க்கரை நோயும், 10 லட்சம் பேருக்கு இரு வகை பாதிப்புகளும் உள்ளன. அவர்களில் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அவர் களுக்கு இத்தகைய முறை மிகுந்த பயனளிக்கும் என தெரிவித்தார்.