தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன், தமிழ்நாடு அரசு வருவாய்துறை அலுவலர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கமல்ஹாசன், தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கே.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.