districts

img

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி தர்ணா

நாமக்கல், நவ.25- ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி பொதுமக்கள் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று தர்ணாவில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பெருமாகவுண்டம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள்  100க்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு  வந்தனர். இதன்பின் அனைவரும் திடீ ரென ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர். இதுகுறித்து போராட்டக் காரர்கள் கூறுகையில், பெருமா கவுண்டம்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கிராமத்தின் பிரதான சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளதுடன், போக் குவரத்துக்கு இடையூறு செய்து வரு கின்றனர். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த மூன்று ஆண்டுகளாக முறை யிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டைகளை மாவட்ட நிா்வா கத்திடம் ஒப்படைக்க உள்ளோம், என்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்ட மக்க ளிடம் மாவட்ட ஆட்சியர் ச.உமா, கோட்டாட்சியர் மா.க.சரவணன் ஆகி யோர் பேச்சுவாா்த்தை மேற்கொண்ட னர். அப்போது சம்பந்தப்பட்ட ஆக்கி ரமிப்பை அகற்றுவதற்கான நடவடிக் கைகள் உடனடியாக மேற்கொள்ளப் படும் என உறுதியளிக்கப்பட்டது. இத னையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.