ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமார், துணைச்செயலாளர் ஆ.ஜீவானந்தம், சிபிஎம் தலைவர்கள் சி.ராஜி, ரவி, ஜி.சக்திவேல், விவசாயிகள் சங்க பகுதிக்குழு தலைவர் கரூ ரான், ஒன்றியச் செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.