தருமபுரி, ஜூலை 13- ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அதியமான் கோட்டை சோழவரா யன் ஏரியில் நீர்வளத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ் வில் மரக்கன்று நடும் பணியை துவக்கிவைத்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அதியமான் கோட்டை சோழவ ராயன் ஏரியில், நீர்வளத்துறையின் சார்பில், ”எனக்கென்று ஒரு மரக்கன்று”, “மனிதர்களை மட்டும் அல்ல மரங்களையும் நேசிப்போம்” என்ற கருத்தை மையமாக கொண்டு, தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கினை முன்னெடுத்துள்ளது. பள்ளி மாணவ, மாணவி யர்கள் மரக்கன்றுகள் நட்டு, வளர்ப்பதை ஊக்குவிக்கும் வித மாக மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 500-க்கும் மேற்ப்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். இம்மாணவர்கள் விதைகள் மற் றும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில், மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பல்ல நாயுடு, ஜல் சக்தி அபியான் அமைச்சகத்தின் நிதி ஆயோக் இயக்குநர் சுப்ரதா பிரகாஷ், தொழில் வல்லுநர் எஸ்.அஜய், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட பல் வேறு துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.