தருமபுரி, செப்.25- தருமபுரி சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க 1462.72 ஏக்கர் நிலம் அரசிடம் ஒப்படைக்கப்பட் டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் சான்றிதழ் கிடைக்கா ததால் தாமதமாவதாக கூறப்படு கிறது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி யில் பின்தங்கிய மாவட்டம் தரும புரி. போதிய வேலை வாய்ப்பு இல்லா ததால், இம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கர்நாடகா, ஆந் திரா, கேரளம் மற்றும் திருப்பூர், கோவை, கரூர் போன்ற இடங்க ளுக்கு வேலைக்காக சென்றுள்ள னர். வேலைக்காக இடம்பெயர் வதை தடுக்க, தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வலி யுறுத்தி வந்தனர். இதனையேற்று, தமிழ்நாடு அரசு சிப்காட் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என அறி வித்தது. இதற்காக நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தடங்கம், அதகப் பாடி, பாலஜங்கமனஅள்ளி, அதிய மான்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய வகை யில் 1733.03 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. சிப்காட் அமைக்க அரசு முன்மொழிவு அளித்தவுடன், தொழிற்சாலைகள் அமைப்பதற் கான பணிகள் தொடங்கும் என்று கூறினர். ஆனால், அரசின் முன்மொ ழிவு வந்து பல மாதங்கள் ஆகியும், பணிகள் ஆமை வேகத்தில் நடந் தன. தற்போது ஆட்சி மாற்றத்தால், அதிகாரிகள் மாற்றப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக விறுவிறுப்பாக பணிகள் நடந்து வருகிறது. இதில், 478.38 ஏக்கர் பட்டா நிலம், 984.34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என மொத்தம் 1462.72 ஏக்கர் நிலம் எடுத்து, அரசிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. இதுவரை நில உரிமையா ளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.77.63 கோடி வழங்கப்பட்டுள் ளது. நில எடுப்பு மற்றும் உட்கட்ட மைப்பு வசதிகள் மேற்கொள்வதற் காக, ரூ.654.30 கோடி திட்ட மதிப் பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள் ளது. தருமபுரி சிப்காட் தொழிற் பூங்காவிற்கு 1.35 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி ரூ.14.08 கோடியில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மனை வரைபட அனுமதி கிடைத்தவுடன், சிப்காட் பூங்கா செயல்பாட்டிற்கு வரும். சிப்காட் டில் சாலைகள் அமைக்கவும், மின் சார மின்விளக்கு பொருத்தவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், தடங்கம் கிரா மம் அருகே தருமபுரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சிப்காட்டிற்கு ரூ.14.08 கோடி மதிப் பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை இணைப்பு சாலை 1.50 கிலோ மீட் டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள் ளது. அதுபோல் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. மின்விளக்கு பொருத்தும் பணியும் விரைவில் நடைபெறும். சிப்காட் பணிகள் முடிந்த நிலையில் உள்ளதால், எலக்ட்ரிக் பைக் கம்பெனி உள் ளிட்ட 9 கம்பெனிகள் ஆலைகள் அமைக்க ஒப்பந்தம் ஏற்படுத்தியுள் ளன. சிப்காட்டில் விரைவில் கட்டு மான பணிகள் தொடங்க உள்ளது. ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் சான் றிதழ் கிடைக்க தாமதம் ஆவதால், ஆலைகள் அமைக்க தாமதம் ஏற் படுவதாக கூறப்படுகிறது.