districts

img

தருமபுரி: மலை கிராமப் பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

தருமபுரி, மார்ச் 5- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மலை கிராம பகுதி களுக்கு ஆம்புலன்ஸ் வாகன சேவையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி சனி யன்று தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற 3 புதிய அவசர கால 108 ஊர்திகளின் சேவை ஆம்பு லன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சி யர் ச.திவ்யதர்சினி சனியன்று கொடிய சைத்து தொடங்கி வைத்தார். அப் போது அவர் கூறுகையில் , இந்த 3 புதிய அவசரகால 108 ஊர்தி வாகனங்களில் ஒரு அவசரகால 108 ஆம்புலன்ஸ்   வாக னம் சுற்றுலா தலமான பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்து இயங்கும்.  மற்றொரு  ஆம்புலன்ஸ்  விபத்தில் பாதிக்கப்படுவார்களை மீட் பதற்காக தருமபுரி வட்டம் கோணங்கி நாய்க்கான அள்ளி (கே.என்.அள்ளி) அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளா கத்திலிருந்து இயங்கும்.  மூன்றாவது ஆம்புலன்ஸ்  மலைவாழ் மக்கள் மற் றும் கர்ப்பிணி தாய்மார்கள்  பயன் பாட்டிற்காக அரூர் வட்டம், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத் திலிருந்து இயக்கப்படும்.  இதன் மூலம், அதிக அளவில் பொதுமக்கள் பயனடைவதுடன், சேவைக்காக காத்திருக்கும் நேரமும், மருத்துவமனைக்கு சென்றடையும் கால அளவும் குறையும்.  ‘108’ என்ற  எண்ணை தொடர்பு கொண்டு கட்டணமில்லா இலவச தொலைபேசி மூலம் தருமபுரி மாவட்ட பொதுமக்கள் இந்த இலவச 108  அவசரகால வாகனங்களின் சேவை யினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மருத் துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், 108 அவசரகால ஊர்தி சேவையின் தருமபுரி மாவட்ட மேலாளர் ராமன்கனி, மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கே.அருள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.