தருமபுரி, மார்ச் 14- நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை யின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து, மாத்திரை கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் ச.திவ் யதர்சினி தொடக்கி வைத்து பேசுகை யில், தருமபுரி மாவட்டத்தில் இத்திட் டத்தின் மூலம் அல்பெண்டசோல் மாத் திரைகள் 4.92 லட்சம் குழந்தைகளுக் கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள 1.22 லட்சம் பெண்களுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற் றும் அங்கன்வாடி மைய பணியாளர் கள் இத்தகவலை பெற்றோர்களிடம் தெரிவித்து அனைத்து குழந்தைகளுக் கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண் டும் என்றார். இந்நிகழ்ச்சியில், தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஷ்வரன், முதன்மை கல்வி அலுவ லர் து.கணேஷ்மூர்த்தி, சுகாதார பணி கள் துணை இயக்குநர் சவுண்டம் மாள், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட் சியர் வினோதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.