அவிநாசி, அக்.13- அவிநாசியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சேவூர் அருகே ஆலத்தூர் ஊராட்சியில் ரூ.1.25 கோடி மதிப்பில் அமைக் கப்பட்டு வரும் சமுதாயநலக்கூடம், அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட 3ஆவது வார்டு ஏரித்தோட்டம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1.21 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, 16,17, 18ஆவது வார்டு சாலை மையப் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆற்றல் மிகு மின் விளக்குகளை திறந்து வைத்தல் என மொத்தம் ரூ.2 கோடியே 91 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணி களை நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் தங்கவேல், பொறுப்பாளர்கள் சரவணன் நம்பி, பால்ராஜ், சிவப்பிரகாஷ், பழனிசாமி, திராவிடன் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.