districts

img

திருப்பூரில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்

திருப்பூர், டிச.17- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப் புக்குழு தலைவர் திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலை மையில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மேயர் ந.திணேஷ்குமார், மாநகராட்சி  ஆணையாளர் கிராந்தி குமார் பாடி,  மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம் ஆகியோர் பங்கேற்றனர். நகர்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பேரூராட்சிகள்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத் துறை, வருவாய்த்துறை, நில அளவைத் துறை, பள்ளிக்கல்வித்துறை, கனிம  வளத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மான கழகம் மின்வாரியம்,  வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்ப யிர்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியம்,  பொதுப்பணித்துறை, பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, நெடுஞ்சாலைத் துறை, தாட்கோ ஆகிய துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற் றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.      இக்கூட்டத்தில், துணை மேயர் ரா. பாலசுப்பிரமணியன், மாநகராட்சி மண் டலத் தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த  அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.