“ஆசை வெட்கமறியாது!” என்று ஒரு சொலவடை உண்டு. திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடு அந்த சொலவ டையைத்தான் நினைவூட்டுகிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணா மலை பங்கேற்கும் மாநாட்டை வரும் 17ஆம் தேதி பல்லடம் அருகே அக்கட்சியினர் நடத் துகின்றனர். அதற்காக அவர்கள் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான விளம்பர பேனர்களை வைத்திருக்கின்ற னர். கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு பல விதங்களிலும் அவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக மகளிரணி, ஊடகப் பிரிவு என்ற பெயரில் வெள்ளிக்கிழமை காலை அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிக ளிலும் அண்ணாமலையுடன் செல்பி எடுக்க வாய்ப்பு என்று சொல்லி உறுப்பினர் சேர்க்கப் போவதாக குறிப்பிட்டிருந்தனர். அதன் முதல் கட்டமாக திருப்பூர் எல்ஆர்ஜி அரசு கல்லூரி, சிக்கண்ணா அரசு கல்லூரி ஆகியவற்றில் வெள்ளியன்று நிகழ்ச்சி நடத்துவதாக கூறியிருந்தனர். அரசு கல்லூ ரிக்குள் அரசியல் நிகழ்ச்சியா என செய்தியா ளர்கள் பாஜக ஊடகத் தொடர்பாளரைக் கேட்டபோது, கல்லூரிக்கு வெளியேதான் நிகழ்ச்சி நடத்துகிறோம் என கூறியுள்ளார். பிறகு ஏன் சமூக ஊடகத்தில் கல்லூரிக்குள் நிகழ்ச்சி நடத்துவதாக தெரிவித்திருந்தார் கள் என்ற கேள்விக்கு சரியான பதில் தர வில்லை.
இந்த விசயம் சமூக ஊடகங்களில் பெரு மளவு பரவிய நிலையில் இரு அரசு கல்லூ ரிகளின் முதல்வர்களும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி தரவில்லை, நிகழ்ச்சி நடத்துவது பற்றி தெரியாது என்று தெளிவாக கடிதம் எழுதி ஆட்சியர், காவல் ஆணையர் உள் ளிட்டோருக்கும் அனுப்பிவிட்டனர். இத்தனை பரபரப்புக்கு இடையே பாஜக மகளிர் அணியினர் என சிலர் ஒரு டேபிள் அமைத்து கல்லூரி நுழைவாயில் முன்பாக நோட்டீஸ், அண்ணாமலை கட்அவுட் சகிதம் தயாராக இருந்தனர். ஆனால் கல்லூரி நுழைவாயில் மூடப்பட்டிருந்தது. கல்லூ ரியில் தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடித்து வெளியே வந்த மாணவிகள் பக்க வாட்டு பாதையில் அனுப்பப்பட்டனர். இதை கவனித்த பாஜகவினர் அக்கட்சியின் மாவட் டத் தலைவர் உள்ளிட்டோர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பேராசிரி யர்களிடம், யார் உங்களை கதவை அடைக்கச் சொன்னது, ஸ்டாலினா, உதயநி தியா, இன்பநிதியா என்று மலிவான முறை யில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரக்கு றைவு என சொல்ல முடியாது, ஏனென்றால் பாஜகவினரின் தரமே அவ்வளவுதான்! இந்த சம்பவம் நடக்கும்போது அங்கி ருந்த காவலர்கள் திட்டவட்டமான முறை யில் செயல்படுவதற்கு மாறாக, பம்மி பதுங்கி சமரசம் செய்து வைத்துக் கொண்டி ருந்தனர். அதன் பிறகு காவல் துறையினரே நுழைவாயிலை திறந்துவிடச் சொன் னார்கள். அதன்படி கதவைத் திறந்துவிட்ட பிறகும் அதில் வந்த மாணவிகள் பாஜகவி னரைப் பார்த்து விலகிச் சென்றனர். அங்கி ருந்த மகளிர் அணியினர் கூவிக் கூவி அழைத் துக் கொண்டிருந்தனர். பயப்படாதீர்கள், என்று மாணவிகளிடம் கூறினர். இவர்க ளைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு பயம் வரும் என்று அவர்களே தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்கள் போலும்! பாஜகவினரைப் போல வேறு ஏதேனும் ஒரு அரசியல் கட்சியினர் அரசுக் கல்லூரி வளாகத்துக்குள் எவ்வித அனுமதியும் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு செயல்பட் டால் காவல் துறை இப்படித்தான் நடந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது.
பெண் ஏன் அடிமையானாள் என்ற பெரி யாரின் அறிவுப்பூர்வமான புத்தகத்தை பள்ளி மாணவிகளுக்கு விநியோகித்த போது அராஜகமாக உள்ளே புகுந்து அடாவ டித்தனம் செய்த கும்பல், இப்போது இவர் கள் தலைவருக்கு ஆள் சேர்க்க என்ன வேண் டுமானாலும் செய்வார்களாம்! மகளிர் அணியினர் மாணவிகளிடம் நோட்டீஸ் கொடுத்தபோது கல்லூரியில் இருந்து வெளியே வந்த மாணவிகள் தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மக ளிர் அணியிடம் ஏன் எங்களுக்கு இடைஞ்சல் செய்கிறீர்கள், நாங்கள் தேர்வுக்கு படிக்கும் நிலையில் இது போல் செய்வது ஏன் என்று சர மாரியாக கேள்வி எழுப்பினார்கள். இவர்க ளது கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரு வழியாக காவல் துறை யினர் குறுக்கிட்டு பாஜகவினரை விலகிச் செல்ல வைத்தனர். நம் நாட்டில் 18 வயதுடையவர்கள் வாக்க ளிக்கும் உரிமை பெற்றுள்ளனர். எனவே அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடை யில்லை. கல்லூரிக்குள் மாணவர்களின் அர சியல் செயல்பாடுகள் என்பது அவர்களது கல்வியையும், கல்விச் சூழலையும் வலுப்ப டுத்தக்கூடியதாக, ஜனநாயகத்தைக் கற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் திருப்பூரில் பாஜகவின் இந்த செயல் அத்தகையது அல்ல. அவர்கள் பொதுவெளியில் தங்கள் கட்சி பிரச்சா ரத்தை செய்வதற்கு உரிமை உள்ளது. ஆனால் தங்கள் தலைவருக்கு ஆள் சேர்க்க கல்லூரி மாணவர்களை இழுக்க நினைப் பது வெட்கக்கேடானது. இவர்களுக்கு தடை விதித்திருக்க வேண்டிய காவல் துறை நெளிவு சுழிவாக நடந்து கொள்ள மாணவிகள் பதிலடி கொடுத்து அவர்கள் முகத்தில் கரியைப் பூசி யதுதான் சிறப்பு. எத்தகைய செயலுக் கும் கேள்வி இன்றி மௌனமாக கடந்து செல்வது ஜனநாயகத்துக்கு ஆபத்து. ஆனால் எல்ஆர்ஜி கல்லூரி மாணவி கள் கேள்விகளால் அவர்களை விரட்டிய டித்தது சபாஷ்! வே.தூயவன்