districts

img

போக்சோவில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கா? நீலகிரி காவல் கண்காணிப்பாளர் விளக்கம்

உதகை, நவ.22- போக்சோ வழக்கில் பாதிக் கப்பட்ட சிறுமியை கைவிலங்கு போட்டு அழைத்து செல்ல வில்லை என்று, கண்காணிப்பு கேமரா வீடியோ வெளியிட்டு நீல கிரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் விளக்கம் அளித்துள் ளார். நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் திரு மணம் செய்த புகாரின் பேரில், உதகை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ் வதி தலைமையிலான போலீசார் விசா ரணை நடத்தி வந்தனர். இதன்பேரில் அந்த  வாலிபரையும், சிறுமியையும் அழைத்து விசாரணை நடத்தி சிறுமியை தனியார் காப் பகத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கோத்தகிரி நீதிமன்றத்தில் நேர்நிறுத்துவதற் காக, ஒரு பெண் காவலர் சிறுமியை கைவிலங் குடன் அழைத்து சென்றதாக சர்ச்சை வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இத னால் குற்றவாளியை விட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கைவிலங்கு மாட்டப்பட்டதா? என் பது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதற்கிடையே பாதிக் கப்பட்ட சிறுமியும், போலீசார் என்னை கைவிலங்கு போட்டு அழைத்து சென்றனர் என்று வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து சிறுமியின் தாயார் உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் புகாரளித்தார். இதனால் பர பரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறு மிக்கு கைவிலங்கு போட்டு அழைத்து செல்லவில்லை என்று  நீலகிரி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேற்கண்ட சம்பவம் குறித்து  உதகை துணை காவல் கண்காணிப்பாளர் யசோதா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டேன். இதன்படி சிறுமியிடம் நேரடி விசாரணை நடத்தியபோது, சிறுமி கைவிலங்கு போடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்கமாக உயரதி காரிகள் அனுமதி வாங்கிதான் கைவிலங்கு போட்டு, அதுவும் குற்றவாளிகளை தான் அவ்வாறு அழைத்து செல்ல முடியும். பாதிக் கப்பட்டவர்களுக்கு கைவிலங்கு போடப் படாது. சிறுமியை அழைத்து சென்ற கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்து விட்டோம். அதில் சிறுமிக்கு கைவிலங்கு போடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே, இதுபோன்ற சம்பவம் குறித்து செய்தி வெளியிடும்போது உண்மை தன் மையை அறிந்து செயல்பட வேண்டும் என்று  வேண்டுகோள் விடுகிறேன், என்றார்.