கோவை, டிச.12- ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை கொள்ளை வழக்கில் வெளிநபர்கள் தொடர்பு இல்லை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது என வடக்கு கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்துள் ளார். ஜோஸ் ஆலுக்காஸ் நகைகடை யில் நடைபெற்ற கொள்ளை சம்ப வம் தொடர்பாக, மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் செவ்வா யன்று, மாநகர ஆணையாளர் அலுவ லகத்தில் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறுகையில், காந்திபுரம் நூறடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கடந்த மாதம் 28ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத் தில் வைரம், பிளாட்டினம், தங்கம் உட் பட 5.15 கிலோ கிராம் நகைகள் கொள்ளை போயிருந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வரை பிடிக்க, ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டோம். சம்பவம் நடந்த 24 மணி நேரத் தில் குற்றவாளி விஜய் என்பதை கண் டறிந்து, அவரை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து, விஜயின் மனைவி, மாமி யார் யோகராணி ஆகியோரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய் தோம். இதையடுத்து, பல்வேறு தேடு தலுக்கு பிறகு காளஹஸ்தியிலி ருந்து, கோயம்பேடு பேருந்து நிலை யம் வந்த விஜயை தனிப்படை போலீ சார் சுற்றி வளைத்து கைது செய்த னர்.
பின்னர், அவரிடம் இருந்த 700 கிராம் வெள்ளி, தருமபுரியில் உள்ள உறவினர் வீட்டில் கொள்ளையடிக் கப்பட்ட 42 கிராம் தங்கம், ரூ.20,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய் யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட 5.15 கிலோவில் 5.12 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார், 99.5 சதவீதம் நகைகள் கைப்பற்றப் பட்டுள்ளது. குற்றவாளியை பிடிக்க கடுமையாக உழைத்த அனைத்து போலீசாருக்கும், பொது மக்களுக் கும் எங்களது பாராட்டுகளை தெரி வித்துக் கொள்கிறோம். மேலும், விஜய் பிரபல நகைக் கடையில் கொள்ளை அடிக்கும் நோக் கில் செல்லவில்லை. அவர் அங் குள்ள ஏதோவொரு செல்போன் கடையில் கொள்ளை அடிக்க திட்ட மிட்டு சென்று உள்ளார். ஆனால், அப் போது அந்த கடையில் புதியதாக பொருட்கள் இறக்கி கொண்டிருந்த தாலும், அந்தப் பகுதியில் பொதுமக் கள் நடமாட்டம் இருந்ததாலும், விஜய் அங்கு செல்லவில்லை. பின்னர், அவர் அதே பகுதியில் சுற்றி திரிந்த போது நகை கடையில் புகுந்துள்ளார். நகைக் கடையில் பணம் இல்லாத தால், தொடர்ந்து, நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இந்த கொள்ளையில் வெளிநபர் கள் தொடர்பு இல்லை என்பது போலீ சார் விசாரணையில் தெரியவந்துள் ளது. அதேபோல், கொள்ளையன் விஜயிடம் ஆதார் கார்டு இல்லாத தால் அவரால் எங்கும் லாட்ஜில் தங்க முடியவில்லை, என்றார். இந்த பேட்டியின்போது, கோவை மத்திய தொகுதி காவல் உதவி ஆணையர் கணேஷ், காவல் ஆய்வா ளர் ராஜ்குமார் ஆகியோர் உடனி ருந்தனர். இதனைத்தொடர்ந்து குற்றவாளி விஜயை போலீசார் நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.