கோவை, ஜன. 21- ஆனைமலையடுத்த கிராமப்புற பகுதிகளில் பேருந்து வசதிகள் இல் லாததால் 50க்கும் மேற்பட்ட பழங் குடியின மாணவர்கள் பள்ளியில் இருந்து நின்றுள்ளானர். மாணவர் களின் அவதியை போக்க உடனடி யாக பேருந்து வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி இந்திய ஜன நயாக வாலிபர் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆனைமலையடுத்த வேட்டைக் காரன் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட சர்க்கார்பதி பழங்குடியின கிரா மத்தில், 168 குடும்பத்தனர் வசித்து வருகின்றனர். இதேபோன்று இத னையொட்டிய நாகரூத், வெப்பரை, முதலயார் பதி உள்ளிட்ட பழங் குடியின கிராமங்களிலும் ஏராமா னோர் வசதித்து வருகின்றனர். ஏற் கனவே இக்கிராமத்தில் பேருந்து வசதிகள் இருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காலத் தில் ஊரடங்கு பிறப்பித்தபோது பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இவ்வழித் தடங்களில் பேருநது தற்போது வரையில் இயக்கப்படவில்லை.
இங்குள்ள பள்ளி குழந்தைகள் சரளப்பதி என்கிற கிராமத்திற்கு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம்வரையில் நடந்து சென்றே கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது. வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், ஆற்றுப் பாதையை கடந்து சென்றே கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது. பேருந்து வசதியின்மை காரணமாக 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் இருந்து நின்றுள்ளனர். மேலும், இடைநிற்றல் அதிக ரிக்கும் வாய்ப்பு உள்ளது. அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டையாக உள்ள பழங்குடியின சமூகம் தற்போதுதான் கல்விச் சாலைக்கே வருகிற வாய்ப்பு ஏற் படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையும் தட்டிப்பறிப்பது போல் உள்ளது போக்குவரத்து துறையின் நடவடிக்கை, உடனடி யாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், இதேபோன்று விளை யாட்டு மைதானங்கள் ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வலிபர் சங்க ஆனை மலை ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில், வாலிபர் சங்க கோவை மாவட்ட செயலாளர் அர்ஜுன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராஜா உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக, சார் ஆட்சியரிடம் வாலிபர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட அதிகாரி கள் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாகவும், ஏழு நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட வாலிபர், மாணவர் சங்கத்தினர் கலைந்து சென்றனர்.