நீலகிரி, செப்.14- தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சிறப்புக்கூட் டம் நடைபெற உள்ளதாக அமைச் சர் மா.சுப்பிரமணியம் தெரிவித் தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் வருமுன் காப் போம் திட்டத்தின் கீழ், சிக்கல் செல் அனீமியா ஸ்கிரீனிங் ப்ரோக்ராம் மையத்தை சுகாதாரத்துறை மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுற் றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன், துறை அதிகாரிகள் ஆகி யோர் பார்வையிட்டனர்.இதன்பின், ரத்ததான முகாமை துவக்கி வைத்து, மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்களு டன் உடல் உறுப்பு தானம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து முதலமைச்சரின் ஒருங் கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையாள அட்டைகளை பயனா ளிகளுக்கு வழங்கினார். இதன்பின் அமைச்சர் மா.சுப்பிர மணியம் கூறியதாவது, தமிழகத் தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று பேர் உயிரிழந் துள்ள நிலையில், கடந்த 9 மாதங் களில் இரண்டு லட்சத்திற்கும் மேற் பட்ட பரிசோதனைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் தன்மை தமிழகத்தில் கட் டுக்குள் உள்ளது. நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் மக் கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்து வ் கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் சிறப்புக் கூட்டம் செப்.16 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிவித் தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, அரசு மருத் துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
மலை மக்களுக்குக்கான மகத்தான திட்டம்
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள சின்கோனா தேசிங்குடி மலைவாழ் குடியிருப்பில் நட மாடும் மருத்துவ முகாமை தமிழக மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 14 கிலோமீட்டர் நடந்து சென்று துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்; 14 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளோம். முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட மகத்தான திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டம், மலைவாழ்வு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பொதுவாக மருத்துவதுறையால் மலை வாழ் கிராமங்கள் புறக்கணிக்கப்படு இருந்தது. அதேசமயம், 2021 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் அவர்களால் இத்திட்டம் துவக்கப்பட்டதிலிருந்தே மலைவாழ் மக்களுக்கு பயனுள்ள மகத்தான திட்ட மாக உள்ளது. மலை உச்சியில் ஒரு வீடு இருந்தா லும் அங்கும் இந்த நடமாடும் மருத்துவ முகாம் சென்று மருத்துவம் செய்ய பேருதவியாக உள்ளது. இந்த ஊரைப் பொறுத்தவரை 140 குடியிருப்புகள் உள்ளன. இதில் 8 பேருக்கு உயர் அழுத்த இரத்த நோய் இருப்பது கண்டறியப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. வால்பாறை மருத்துவமனைக்கு கூடுத லாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தர உள்ளது, என்றார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, துணை ஆட்சியர் பிரியங்கா, சுகாதாரப்பணி துணை இயக்குநர் அருணா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.