districts

img

திருப்பூரில் மரணக்குழி சாலைக்கு மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.8- அணைப்பாளையம் முதல் வேலம்பாளையம் செல்லும் சாலை சீர்குலைந்து மரணக் குழிக ளாக இருப்பதால் அங்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் வளையம் வைத்து ஆர்ப் பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகரில் அணைப் பாளையம் முதல் வேலம்பாளை யம் வரை செல்லும் சாலையில் கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக நான்காவது குடிநீர் திட் டம், பாதாளச் சாக்கடை திட்டம் மற் றும் அதானி கேஸ் குழாய் பதிக்கும் திட்டம் என அடுத்தடுத்து தோண் டப்பட்டு உருக்குலைந்து குண் டும், குழியுமாக படுமோசமாக உள் ளது. இதனால் அன்றாடம் இந்த சாலையில் சென்று வரக்கூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் பொது மக்கள் வாக னங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை உள் ளது. மேலும் இந்த சாலையில் வழக்கமாக இயக்கப்படக் கூடிய நகரப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டு விட்டன.  எனவே மரணக்குழி சாலைக்கு  மலர் வளையம் வைக்கும் போராட் டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நக ரக்குழு அறிவித்தது. இதன்படி வெள்ளியன்று மாலை ரங்கநாத புரம் பேருந்து நிறுத்தம் முன்பி ருந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊர் வலமாகப் புறப்பட்டு எஸ்.பி.நகர் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் த.நாகராஜன் தலைமை வகித்தார். இதில் முன் னாள் நகரச் செயலாளர் வி.பி.சுப் பிரமணியம், நகரச் செயலாளர் ச. நந்தகோபால், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்.  முன்னதாக ஊர்வலத்தில் வந் தவர்கள் படுகுழியான சாலையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத் தினர். நகரக்குழு உறுப்பினர் லட் சுமி, கிளைச் செயலாளர்கள் நவநீ தன், செல்வக்குமார் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.