districts

img

சாமளாபுரம் அருந்ததிய மக்களுக்கு பட்டா கோரி நிலவுரிமை பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 14- சாமளாபுரம் அருந்ததிய மக்களுக்கு பட்டாகோரி திங்க ளன்று நிலவுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  சாமளாபுரத்தில் அருந்ததிய மக்கள் குடியிருப்பைக் காலி செய்யக் கூடாது என வலியுறுத்தி, சாமளாபுரம் நிலவுரி மைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் திங்களன்று காலை சாம ளாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தீண்டாமை  ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டச் செயலாளர் ச.நந்த கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடத் தமிழர்  கட்சி, சமூக நீதிக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின்  நிர்வாகிகள், மக்கள் குடியிருக்கும் இடத்திற்கு வகை மாற் றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்திப் பேசினர்.