தருமபுரி, ஜன.23- வேட்டுவனஅள்ளி ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் நிலப் பட்டா கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்த பின்னர் அவர்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், வேட்டுவன அள்ளி ஊராட்சியில் 4 தலைமுறைகளாக சுமார் 300 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகி றோம். விவசாயம் மட்டுமே எங்களின் முழு வாழ்வாதாரமாகும். கடந்த 25 ஆண்டு களுக்கும் மேலாக ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. நிலப்பட்டா இல்லாத காரணத்தினால் எங்களுடைய வீட்டிற்கு மின் இணைப்பு பெறு தல், விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறு தல், விவசாயத்திற்கு கிணறு தோண்டுதல், விவசாயம் செய்ய ஆழ்குழாய் கிணறு அமைத் தல், விவசாயத்தை மேம்படுத்த நிலத்தை சீர மைத்தல், கூட்டுறவு வேளாண்மை மூலம் கிடைக்கும் விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள் போன்றவை பெறமுடிய வில்லை. ஆகவே, எங்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க எங்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.