நாமக்கல், பிப்.2- பள்ளிபாளையம் அருகே, உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளைநிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த பலநாயக்கன்பாளையம் கிராமத்தில், விவசாய விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி விளை நிலங்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உயர்மின் கோபுரங்களுக்குகெதிரான சங்கங்களின் கூட்டியத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் படைவீடு பெருமாள், நிர்வாகிகள் ராஜேந்திரன், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம், எனவும் தெரிவித்தனர்.