சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 50 உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர், அங்கேரிபாளையம் வரி வசூல் மையம் அருகே புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப்பன், கிளை செயலாளர் வி.கதிர்வேல், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகி பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.