districts

img

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பட்டா எங்கே?

சேலம், டிச.11- சேலம் ஆவின் பால் பணிக்காக  நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து, சேலத்தில் மார்க் சிஸ்ட் கட்சியுடன் இணைந்து  விவசாயிகள் ஆவணங்களை  தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டம் தளவாய் பட்டி பகுதியில் அமைந்துள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற் பத்தியாளர் ஒன்றியத்திற்கு 54  ஏக்கர் விவசாய நிலம் 38 குடும்பத் தினர் சேர்ந்து வழங்கி உள்ளனர்.  இவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் வீட்டு மனை பட்டா வழங்கி விட்டு, மீதமுள்ள 33 குடும்பத்தி னருக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. தமிழக  அரசின் முன்னாள் பால்வளத்துறை  அமைச்சர் நாசர் அவர்கள் முன்னி லையிலும் தற்போதைய பால்வ ளத்துறை அமைச்சரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை. 44 ஆண்டுகளாக ஆட்சி கள் பல கடந்தும் தற்போது வரை  பட்டா வழங்காததை கண்டித்து. ஏர்  கலப்பையுடன், கையில் இருந்த, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை  ஆகியவற்றை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ஆவின் பால் பண்ணை முன்பு போராட்டம் நடத்த  காவல்துறையினருக்கு 20 நாட்க ளுக்கு முன்பு அனுமதி கேட்டு இருந்த நிலையில் கடைசி நேரத் தில் காவல் துறையினர் அனுமதி மறுத்ததை கண்டித்தும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும், பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சி யர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேரடியாக வந்து பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி, கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் மேவை. சண்முக ராஜா, சேலம் தாலுகாச் செயலா ளர் கே. எஸ்.பழனிசாமி மாவட்டக் குழு உறுப்பினர் டி. பரமேஸ்வரி,  சுந்தரம், மயில்வேலன்,பாதிக் கப்பட்ட விவசாயி சிவராமன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.