மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் மாவட் டங்களாக அறிவித்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் செவ்வாய்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கொண் டலாம்பட்டி மண்டலச் செயலாளர் கந்தன் தலைமை வகித் தார். சிபிஐ மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்டு பலர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.