திருப்பூர், டிச.18- மத்திய அரசின் நாபெட் நிறுவனம் விவசா யிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ள கொப்பரை தேங்காய்களை வெளிச்சந்தை யில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வருகி றது. இதனால் விவசாயிகள் நேரடியாக விற் பனை செய்யும் போது விலை குறையும் எனக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனம் கொப் பரை தேங்காயை கிலோ 108 ரூபாய்க்கு விவ சாயிகளிடமிருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து வைத்துள்ளது. கொள் முதல் செய்து வைத்துள்ள கொப்பரைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற் கான ஏற்பாடு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைப் பயன்படுத்தி எண் ணெய் நிறுவனங்கள் குறைவான விலைக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் பட்சத்தில், விவசாயிகள் வெளிச்சந்தையில் விற்கும் போது கொப்பரை தேங்காயின் விலை குறையும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாது காக்கும் வகையில் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள கொப்பரை தேங்காய்களை எண் ணெய்யாக மாற்றி நியாயவிலைக் கடைக ளில் விற்பனை செய்யும் திட்டத்தை அறிமு கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி டெல் லியில் விவசாயிகள் தொடர்ந்து ஆறா வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆத ரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக் கையை வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.