districts

img

ஹரியானாவில் போராடும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மார்ச் 15- ஹரியானாவில் போராடும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தினர்  தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு பிடித்தம் செய்த ஜிபிஎப் கணக்கு இருப்பு விவரத்தை தெரி விக்க வேண்டும். ஜிபிஎப் கணக்கு எண் அனைவருக்கும் வழங்க வேண்டும்.அரசு அறிவித்த ஜிபி எப் தொகையில் ஊழியர்களுக்கு கடன் வழங்கலாம் என்ற அர சாணையை அமல்படுத்த வேண் டும். அனைத்து அங்கன்வாடி ஊழி யர்களுக்கும் மருத்துவ அட்டை வழங்க வேண்டும். சம்பள பட்டி யல் 6 மாத்திற்கு ஒருமுறை வழங்க வேண்டும் என்ற அர சாணையை அமல்படுத்த வேண் டும். அங்கன்வாடியில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண் டும். அங்கன்வாடி மையத்திற்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள், எரிவாயு வாங்க முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஹரியானாவில் போரா டும் அங்கன்வாடி ஊழியர்களை அழைத்து பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தருமபுரியில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங் கத்தினர் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ராஜம்மாள் தலைமை வகித்தார். இதில், மாநி ல செயலாளர் எம்.லில்லி புஷ்பம், மாவட்ட செயலாளர் சி.கவிதா, மாவட்ட பொருளாளர் என்.தெய் வானை, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சி.கலா வதி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.