ஈரோடு முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 3, 2022 12/3/2022 10:15:06 PM உரிய காலத்தில் ஊதியம் பெற்று வழங்காத பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஈரோடு முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.