districts

img

நூறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளப்பாக்கி சின்னவீரம்பட்டி ஊராட்சி முன்பு ஆர்ப்பாட்டம்

உடுமலை, பிப். 28 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு பல மாதங் களாக சம்பளம் வழங்காத ஒன்றிய  மோடி அரசைக் கண்டித்து விவசாய  தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கி ழமை சின்னவீரம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினர். உடுமலை ஊராட்சி ஒன்றியம் சின்ன வீரம்பட்டி ஊராட்சியில் வேலை செய்த  ஊரக வேலை திட்ட தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டிய சம்பளப்பாக் கியை வழங்க வலியுறுத்தியும், அதே  ஊராட்சியில் இருக்கும் சேரன் நகர்  பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு  ஊரக வேலை திட்டத்தில் வேலை தர  மறுக்கும் அதிகாரிகளை கண்டித்தும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சின்னவீரம்பட்டி கிளை சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, ஊராட்சி செயலாளரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பஞ்சலிங்கம் கூறுகையில்,  உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத் துக்குளம் ஒன்றியப் பகுதிகளில் ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு பல  மாதமாக சம்பளம் வழங்காத நிர்வாகத் தைக் கண்டித்து அனைத்து  ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பாக காத்தி ருப்பு போராட்டம் நடப்படும் என்றார்.  முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பி னர் சுந்தரம்  தலைமை வகித்தார். ஒன் றிய துணைத் தலைவர் சக்திவேல் முன் னிலையில், மாவட்டச் செயலாளர் பஞ்ச லிங்கம் கண்டன உரையாற்றினார். சங்க  நிர்வாகிகள் சிவராமன், கனகராஜ், ராஜன் மற்றும் த.மு.எ.க.சங்கத்தின் தோழன்ராஜா, துரையரசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.