districts

img

வழிபாட்டு மையங்களை பாதுகாக்க வலியுறுத்தி தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, டிச.6- வழிபாட்டு மையங்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்  கழகம் சார்பில் தருமபுரி பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் என். சுபேதார் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமு முக தலைமை கழக பேச்சாளர் ரெக்ஸ்ரபீக், திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், விடுதலை சிறுத்தைகள் மண்டல அமைப்பு செயலாளர் பொ.மு.நந்தன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், தருமபுரி மறை மாவட்ட செய்தி தொடர்பா ளர் ஜேசுதாஸ் ஆகியோர் கண்டன உரை யாற்றினார். இதில், தமுமுக மாவட்ட செயலா ளர் அப்துல்சுகூர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.