districts

img

வீட்டுமனைக்கான நிலம் கேட்டு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 20- விண்ணப்பள்ளி ஊராட்சியில், வீட்டுமனை பட்டா அளித் தும், இடம் கொடுக்கவில்லை என திங்களன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், எரப்பநாயக்கன்பாளையம் காலனி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு இடமும் வழங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள் பழுதடைந்துள்ளதால் அவற்றை பரா மரித்து கொடுக்க வேண்டும். சமுதாயக் கூடம், ரேசன் கடை அமைக்க வேண்டும். விண்ணப்பள்ளி - எரப்பநாயக்கன் பாளையம் - வாலிபாளையம் வரை தார்ச் சாலை அமைத்து பேருந்து வசதி செய்ய வேண்டும். குடிநீர், சாக்கடை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  விதொச கிளை செயலாளர் ஜி.சரவணன் ஆர்ப்பாட்டத் திற்கு தலைமை ஏற்றார். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.மாரிமுத்து, சிபிஎம் ஒன்றிய செய லாளர் டி.சுப்பிரமணி, அனைத்துவகை ஐக்கிய தொழிலா ளர் சங்க பொருளாளர் ஏ.பி.ராஜு, ஆர்.ரமேஷ், ஆர்.நடரா ஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். முடிவில், சாமிநாதன் நன்றி கூறினார்.