districts

img

சாலையோர சிறு வியாபாரிகளிடம் சுங்க வசூல் ஏலத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தாராபுரம்,  ஜூலை 5 - தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சாலையோர சிறு வியாபாரி களிடம் சுங்க வசூல் செய்ய ஏலம் விடுவதை ரத்து செய்யக் கோரி சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் தாலுக்கா பொது தொழிலாளர் சங்கம் சிஐடியூ  சார்பில் சாலையோர சிறு வியாபாரிகளிடம் சுங்க வசூல்  செய்ய ஏலம் விடுவதை ரத்துசெய்யக்கோரி தாராபுரம்  அண்ணாசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு கே.மேகவர்ணன் தலைமை வகித்தார். தாராபுரம் நகரில் சாலையோரங்களில் சிறு வியாபாரம் செய் யும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தினசரி வியாபாரம்  செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது வரை நடைமுறையில் இல்லாத புது நடவடிக்கையாக சாலை யோர வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் செய்ய தாராபுரம்  நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை யானது ஏழை, எளிய சிறு வியாபாரிகளை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த தினசரி சுங்க வசூல் நடவடிக்கையை  ரத்து செய்யவேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பி.பொன்னுச்சாமி, பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் சுப்பிர மணியன், ஆ.மணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மோகன் நன்றி தெரிவித்தார்.