தருமபுரி, மே 4- கம்பை நல்லூர் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக் கும் நூறுநாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வார்டில் உள்ள குடும்பங்களுக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் ஆண் டுக்கு 200 நாள் வேலை, நாளொன்றுக்கு கூலி ரூ.600 வழங்க வேண்டும். பணிதளத்தில் குடிநீர், நிழற்கூடம், மருத்துவ முத லுதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஜி.எம்.மாது மணி தலைமை ஏற்றார். இதில் மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி, மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.பாண்டியம்மாள், மாவட்ட துணைத்தலைவர் சி.ராஜா, ஒன்றிய செயலாளர் ஏ.மனோகரன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.மாதேஸ்வரன், சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆனஸ்ட்ராஜ் ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினர்.