districts

img

நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மாயம்:

திருப்பூர், ஜன.30- நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 70 லட்சம்  தொழிலாளர்களின் தரவுகள் அனைத்தும் அழிந்து விட்டதால் புதிய அட்டை பதிவிறக்கம் செய்ய  முடியாத நிலைமை உள்ளது. மீண் டும் தங்களுடைய ஆவணங்களை ஏற்ற அரசே பொறுப்பேற்க கோரி சிஐ டியு சார்பில் செவ்வாயன்று நலவா ரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்ட  துணைத்தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், முத்துசாமி, அன்பு, கட்டு மான சங்க மாவட்டப் பொருளாளர் ராஜன், தாராபுரம் பொதுத் தொழிலா ளர் சங்கம் பொன்னுசாமி உட்பட  பலர் பங்கேற்றனர். இதில், தமிழகம்  முழுவதும் நலவாரியத்தில் ஆன் லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 70  லட்சம் தொழிலாளர்களின் தரவுக ளும் ஆவணங்களும் அழிந்து விட்ட தாக கூறப்படுகிறது. குறிப்பாக புதிய  பதிவிற்கு குடும்ப அட்டை அதனு டைய பிரிண்ட் அவுட், ஆதார், வங்கி  புத்தகம் உள்ளிட்ட அனைத்து விப ரங்களும். குடும்ப உறுப்பினர் விபரங் களும், வாரிசுதாரர் விபரங்களும், தொழிலாளியின் புகைப்படம். கையெழுத்து, மாவட்ட தொழிலா ளர் துறை அதிகாரியின் கையொப் பம் உள்பட அனைத்தும் அழிந்து விட் டதால் புதிய அட்டை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலைமை உள்ளது.  மேலும், மூன்று மாதமாக கட்டுமான  அமைப்புசாரா மற்றும் தொழிலா ளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை. பணப்பயன் கேட்டு விண் ணப்பித்த யாருக்கும் பணப்பயன் வழங்கப்படவில்லை. புதிய அட்டை  பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. மாவட்ட அதிகாரியின் கையெழுத்து இல்லாமல் இருக்கிறது. தமிழகம்  முழுவதும் அனைத்து தொழிலாளிக ளுக்கும் மீண்டும் தங்களுடைய ஆவ ணங்களை ஏற்ற அரசே பொறுப் பேற்க வேண்டும். ஆப் லைன் பதிவை  கொண்டுவர வேண்டும். மாவட்டங் களில் உள்ள உதவி ஆய்வாளர்க ளின் மூலம் அனைத்து பகுதிகளிலும்  முகாம் அமைத்து தொழிலாளர்களு டைய ஆவணங்களை ஏற்றுவதற்கு அரசும் நலவாரியமும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. முடி வில் சாலையோர வியாபாரிகள் சங்க  மாவட்டச் செயலாளர் பாலன் நன்றி கூறினார். இதில், திரளானோர் பங் கேற்றனர்.