districts

img

கோவையை புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, டிச.27-  ரயில்வே நிர்வாகத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கோவையை புறக்கணித்து வரும் ரயில்வே  துறையை கண்டித்து கோவையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருச்செந்தூர் ரயிலை கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும். பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலை யங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும். மேலும், கோவை மாவட்டத்தை ஒன்றிய ரயில்வே புறக்கணிப்பதாக குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் யு. கே.சிவஞானம், மதிமுக ஆர்.ஆர்.மோகன் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜோ.இலக்கியன் மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, , தமுமுக உட்பட 20க்கும் மேற் பட்ட கட்சி  அமைப்புகளை சேர்ந்த திரளா னோர் கலந்து கொண்டனர்.