தருமபுரி, மார்ச் 19- கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப்பிற்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை கண்டித்தும், இந்த தீர்ப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய கூட் டமைப்பு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் என்.சுபேதார் தலைமை வகித்தார்.தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பிரதிநிதி ஒய்.சாதிக்பாஷா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மண் டல செயலாளர் பொ.மு.நந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.