தருமபுரி, ஜூன் 11- மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாஜகவை கண் டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜகவின் நுபுல் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கைது செய்ய வேண்டும். மக்கள் ஒற் றுமையை சீர்குலைக்கும் பாரதிய ஜனதாக கட்சியை கண் டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி நகரத் தலைவர் டி.ஏ.அஸ்கர் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவ நாதன், சமூக நல்லினக்கமேடை பொறுப்பாளர் இரா.சிசு பாலன், முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில நிர்வாகி ஓர்.சாதிக் பாட்ஷா, முன்னாள் மாவட்ட தலைவர் தென்றல் யாசின், மாவட்ட காஜி ஜனாப் பஜ்ஜி லே கரீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, எஸ்.எம்.இர்சாத் நன்றி கூறி னார்.