districts

img

அக்னிபாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 24- அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. ஒன்றிய பாஜக அரசு இந்திய ராணு வத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட் டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்டம், ஓம லூர் பேருந்து நிலையம் முன்பு மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் தாலுகா செயலளார் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலளார் க.காளிதாஸ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.ராமமூர்த்தி, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட துணை தலைவர் வை.ரஸ்யாரவி, வடக்கு கிளை செயலாளர் எம்.ராம சாமி, தெற்கு கிளை செயலாளர் க.கந்த சாமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். சங்ககிரி தாலுகா, சன்னியாசிபட்டி யில் சிபிஎம் தாலுகாக்குழு உறுப்பி னர் பழனிச்சாமி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ். கே.சேகர், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பவித்ரன், சிபிஎம் கிளைச் செயலாளர் முருகேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன் னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ஏ.ராமமூர்த்தி தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு, விவசாயிகள் முன்னணியின் நிர்வாகிகள் அய்யந்துரை, நடராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தை வேல், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் நேதாஜி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், என்.பிரவீன்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் எம்.ராம சாமி (பெத்தநாயக்கன்பாளையம்) ஆர்.பழனி (மேச்சேரி), எம்.ரத்தின வேல், மோகன், தங்கராஜ் (ஓமலூர்), தங்கராஜ் (நங்கவள்ளி) உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.