திருப்பூர், செப்.25 - தொழில்நுட்ப காலிப்பணியிடங் களை உடனடியாக நிரப்பப் கோரி தமிழ் நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத் தினர் திருப்பூர் ஐடிஐ முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். மறுக்கப்பட்டு வரும் சான்றிதழ்தாரர்களுக்கு முதல் வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பிபிபி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பிபிபி மற்றும் சிஓஇ ஊழியர்களை காலவரை ஊதி யம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மின்சார பராமரிப்பில் கட்டமைப்பு காரணமாக ஏற்படும் பிரச் சனையில் தொழில்நுட்ப ஊழியர்க ளுக்கு தண்டத்தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும். துறையில் காலதா மதப்படுத்தப்பட்டு வரும் ஜேடிஓ, ஏடிஓ, டிஓபி, ஆர்எல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2004ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப் பட்ட சங்க ஊழியர் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்ற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஐடிஐ முன்பு உணவு இடை வேளை ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை முறையீடு புதனன்று நடை பெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலு வலர் சங்கத்தின் மாநில மைய அறை கூவலின் படி புதனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொழில் பயிற்சி அலுவலர் சங்க கிளைச் செயலா ளர் என்.பசுபதி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ராமன், அந்தோணி ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற் றினர். முடிவில் தொழில் பயிற்சி அலு வலர் சங்க கிளைப் பொருளாளர் சிவகு மார் நன்றி கூறினார்.