districts

img

நங்கவள்ளி அம்பேத்கர் நகரில் தீண்டாமைச் சுவற்றை அகற்றிடுக

சேலம், நவ.18- நங்கவள்ளி அம்பேத்கர் நகரில் தலித் மக்களின் பாதையை மறித்து எழுப்பப்பட் டுள்ள தீண்டாமைச் சுவற்றை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேரூராட் சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் ஏராளமான தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. முன்னதாக, அப்பகுதியை சேர்ந்த தர்மலிங் கம் என்பவர் அவ்விடத்தை தலித் மக்க ளின் பயன்பாட்டிற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த இடத்தை முறைகேடாக அபகரிக்கும் நோக் கத்தில் முன்னாள் நங்கவள்ளி ஒன்றிய சேர்மன் பழ.ஜீவானந்தம் உள்ளிட்டோர் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த வழித் தடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதன்பின் ஆதிக்க சாதியினரின் துணையுடன் தீண் டாமை சுவரை எழுப்பியதுடன், தலித் மக்க ளுக்கு சொந்தமான இடத்தை வீட்டுமனை களாக பிரித்து விற்பனை செய்யவும் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தலித் மக்களை ஏமாற்றி நிலத்தை அபகரிக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண் டும். அப்பகுதியிலுள்ள மூன்று ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டிட வேண்டும்.  தலித் மக்களின் பாதையை மறித்து கட்டப்பட் டுள்ள தீண்டாமை சுவற்றை அகற்றிட வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நங்கவள்ளி வருவாய் ஆய்வா ளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அம்பேத்கர் நகர் சிபிஎம் கிளை செயலா ளர் பி.மாதையன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய செய லாளர் மேவை. சண்முகராஜா துவக்கி  வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் கே. ராஜாத்தி, எடப்பாடி தாலுகா செயலாளர் மூ. பெரியண்ணன் உள்ளிட்டோர் கண்டன  உரையாற்றினர். முடிவில், மாவட்ட செய லாளர் பி.ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.