districts

img

ஓய்வூதியம் வழங்க மறுக்கும் வருவாய் துறையினரை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 19- திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் வருவாய் ஆய்வாளர் அலு வலகம் முன்பு அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். எலச்சிபாளையம் குறுவட்டம் பகு தியில் சுமார் 13 கிராமங்கள் உள்ளன. இதில், ஓய்வூதியம் கேட்டு விண்ணப் பம் செய்ய கூடிய முதியவர்கள் மற்றும் விதவைகள் கணவனால் கைவிடப்பட் டவர்கள் என பலதரப்பட்ட பெண்கள்  ஓய்வூதியம் கேட்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்போது அதனை தள்ளு படி செய்து, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை தடுக் கும் வகையில் வருவாய்த் துறையினர் செயல்பட்டு வருவதை கண்டித்தும், தகுதியானவர்களுக்கு ஓய்வு ஊதி யம் வழங்கிட வேண்டும். மேலும், முதி யோர் ஓய்வூதியம் பெறும் வயதான வர்களுக்கு அரிசி அட்டை வழங்காத தால் பண்டிகை காலங்களில் அரசு  அறிவிக்கும் சிறப்பு தொகுப்பு பொருட் கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர்.  ஆகவே, அவர்களுக்கு அரிசி அட்டை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் பி.சத்தியா தலைமை வகித்தார். ஒன்றிய பொரு ளாளர் ஜீ.பழனியம்மாள் முன்னிலை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.அலமேலு கோரிக்கை களை விளக்கிப் பேசினார். பால் சங்க  முன்னாள் மாநிலச் செயலாளர் ஏ.ரங்க சாமி, எலச்சிபாளையம் ஒன்றிய கவுன் சிலர் சு.சுரேஷ், சிஐடியு தலைவர் கே. எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் லட்சுமணனிடம் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட் டது. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண்பதாக உறுதிய ளித்தார்.