சேலம், ஜன.6- சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கால மாக அறிவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத் தினர் பல்வேறு பகுதிகளில் முக்காடு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி மற்றும் சேலம் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதே போல் எடப்பாடி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோட்டத் தலைவர் மாணிக்கம் தலைமை யிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திராளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.