districts

img

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மின்வாரிய‌ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 23- பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் புதனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவில் பால், பால் பவுடரை சேர்க்க வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஆவின் பாலின்  விற்பனை விலையை குறைத்ததால் ஏற் படும் இழப்பை ஈடு செய்ய, மாநில அரசு 300 கோடி ரூபாய் ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். ஆவின் நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் பி.அரியா கவுண்டர் தலைமை வகித்தார். இதில், மாநி லத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட செய லாளர் மாதேஸ்வரன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, வளைய செட்டிப்பட்டி பால் உற்பத்தியா ளர் சங்க தலைவர் எஸ்.மணி, முத்தம்பட்டி  பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் மாணிக் கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.