நாமக்கல், பிப்.23- மின்வாரியத்தை 3 ஆக பிரிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மின்வாரியத்தை கூறுபோட்டு பிரிப் பதை தமிழக அரசு கைவிட வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள குறை களை களைய வேண்டும். மின்வாரி யத்தை தனியார்மயமாக்கும் திட் டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் திட்டத் தலைவர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் முரு கேசன் துவக்க உரையாற்றினார். இதில், மண்டலச் செயலாளர் காளியப் பன் மற்றும் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். இதில் மாநில துணைத்தலை வர் பி.ஜீவா, மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், ஓய்வுபெற் றோர் அமைப்பின் மாவட்டச் செயலா ளர் ஜி.பி.விஜயன், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.